பாடம் தான் வாழ்க்கை வாழ்க்கை தான் பாடம் இதை நாம் தெரிந்து கொண்டும் புரிந்து கொண்டும் நம் வாழ்க்கையினுள் அதை செயல் படுத்தினால் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு நாம் உயர்ந்து விடுவோம் எல்லோரும் பார்க்கும் அளவிற்கு... க.தரணி
பள்ளிக் கல்லூரி என்பது நம்முடைய படிப்பு திறன்கள் மட்டும் அல்லாமல் நமக்குள் ஒளிந்திருக்கும் அனைத்து கலைகளையும் வெளிக்கொண்டு வந்து உலகமே நம்மளை பார்க்கும் நிலைமைக்கு தள்ளுவதும் அதற்கு அடித்தளமாய் இருப்பதும் கல்வி தான். க.தரணி
பள்ளிக் கல்லூரி என்பது நம்முடைய படிப்பு திறனை மேம்படுத்துவதற்க்கு மட்டும் அல்ல நம்மளுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுத் தந்து நல்வழிபடுத்தவும் உதவுகிறது. க.தரணி
கல்வி இருந்தால் போதும் நம்மாள் நம் வாழ்க்கையே வாழ முடியும். ஆனால், கல்வியே வாழ்க்கை ஆகி விடாது. க. தரணி
நீ என்னை விட்டு விட்டாய் என்று சொல்லி கதறி அழுவதை விட உனக்காக காத்திருப்பது கூட ஒரு சுகமே க.தரணி
காலங்கள் நேரங்கள் கூட மாறி போகி விடலாம். ஆனால், உன்னை காதலித்த அந்த அழகிய தருணங்கள் மட்டும் என்றும் மாறது இன்றும் நினைத்தால் கூட உதட்டின் சிறு புன்னகையுடன் கண்களில் கண்ணீர் துளிகளுடனும் உன் நினைவுகளுடனும். க.தரணி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போயின, நேரங்களும் வீணாகின, ஆனால், உன்னை என்னிடம் கொண்டு வர வைக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும் வீணாகாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன். நம் காதலுக்காக க.தரணி