நடனம்
நடனம்
மாதுரி நடனம் ஆடி கிடைக்கும் காசில் தன் வயதான அம்மாவையும்,தம்பியையும் கவனித்து வந்தாள்.அவளுடைய அண்ணன் வாத்தியம் இசைப்பான்.அண்ணி பாட்டு பாடுவார்கள்.கிடைக்கும் பணத்தில் பாதியை அண்ணன் குடும்பத்திற்கு கொடுத்து விடுவாள்.
இவள் ஆடுவதை மிகவும் ரசித்த பக்கத்து ஊர் மிராஸ்தார்,அவளை
திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.அவர் விருப்பத்தை அவளிடம் சொல்லவும் செய்தார்.
அதற்கு அவள்,ஐயா என்னை நம்பி இரண்டு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.நான் உங்களை
மணந்து கொண்டால் அந்த இரண்டு குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டி வரும்.என்னை வற்புறுத்த வேண்டாம்,மன்னித்து விடுங்கள் என்று கூற அவரும் அவள் சொல்வதில் நியாயம் இருக்குறது என்று அவர் விருப்பத்தை கை விட்டு விட்டார்.