Vadamalaisamy Lokanathan

Crime

4  

Vadamalaisamy Lokanathan

Crime

மெயில்

மெயில்

2 mins
300



ரூபா ஒரு நடுத்தர குடும்ப தலைவி.திருமணத்திற்கு முன்பு,ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கம்யூட்டர் பில் போட்டு கொடுக்கும் வேலையில் இருந்தாள்.கணினியில் அடிப்படை கல்வி பயின்று இருந்தாள்.அதில் வேலை செய்ய ஓரளவிற்கு திறமை பெற்று இருந்தாள். இப்போது திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாக வீட்டில் இருக்கிறாள்.குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது.குடும்ப சூழ்நிலை அவளும் வேலைக்கு சென்று சம்பாதித்தால் கடன் இல்லாமல் வாழலாம்.

குழந்தை இருப்பதால் வெளியில் வேலைக்கு செல்ல முடியவில்லை.

கணவன் காலை எட்டு மணிக்கு போனால் இரவு எட்டு மணிக்கு தான் திரும்பி வருவான். பகல் முழுவதும் அவளுக்கு வேலை இல்லை.

அதனால் வீட்டில் இருந்து கொண்டு கணினியில் செய்து கொடுக்க ஏதாவது வேலை இருக்குமா என்று தேடி கொண்டு இருந்தாள்.தெரிந்த நண்பர்களிடமும் சொல்லி வைத்து இருந்தாள் .

அன்று காலை கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு,குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு,தன்னிடம் இருந்த ஸ்மார்ட் போனில் தனக்கு வந்த மெயில் பார்த்து கொண்டு இருந்தாள்.

அதில் பகுதி நேர வேலைக்கு பெண்கள் தேவை படுகிறார்கள்,ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் ஐநூறு கிடைக்கும்.,ஒரு ஸ்மார்ட் போன் மட்டும் இருந்தால் போதும்,விருப்பம் உள்ளவர்கள்,அடுத்த வரியில் இருக்கும் லிங்கை திறந்து பார்க்கவும் என்று எழுதி இருந்தது.

அவளும் பணத்திற்கு ஆசை பட்டு அதை தொடர்பு கொண்டாள்.அதில் வங்கி கணக்கு விவரங்கள் கேட்க பட்டு இருந்தது.அவள் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் விவரமாக எழுதி இருந்தார்கள்.குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணி புரிந்தால் கூடுதல் வருமானம் என்று கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து அதில் சேர விரும்பினாள்.ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் அவளுக்கு மிகவும் பெரிதாக தெரிந்தது.அதுவும் வீட்டில் இருந்த படி.

அடுத்த நாள் அவளுக்கு அந்த வேலையை செய்யும் படி மெயில் வந்தது.அதை திறந்து பார்க்க பத்து மெயில் வந்து இருந்தது.அந்த மெயிலில் உள்ள இணைப்பை டவுன் லோட் செய்து,அவர்கள் குறிப்பிட்டு உள்ள,இனிய தளங்களில் பதிவு ஏற்றம் செய்ய வேண்டும்.வேலை மிகவும் எளிதாக இருந்தது.இணைய தொடர்பு வேகம் இருந்தால் அரை மணி நேரத்தில் அவளால் செய்து முடிக்க முடியும் என்று நம்பினாள்.மூன்று நாட்கள் முடிய அவளுடைய ஆயிரத்து ஐநூறு ரூபாய் அவள் கணக்கிற்கு வந்து இருந்தது.இது அவளுக்கு மேலும் நம்பிக்கை 

தந்தது.அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சி,ஒரு மாதம் கடந்த பிறகு கணவனிடம் சொல்லலாம் என்று நினைத்து இருந்தாள்.ஆனால் அவளுடைய மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.அவளுடைய தோழி ஒருத்தி,பேசும் போது,அது போலியான மெயில்,மட்டும் ஆபத்தானது என்று சொல்லி இருந்தாள்.இதற்கு நடுவே

அவளுக்கு மத்திய அரசு விலாசத்துடன் ஒரு மெயில் வந்து இருந்தது.அதை திறந்து பார்க்க அவளுக்கு மேலும் அதிர்ச்சி.கடந்த மூன்று நாட்களாக,ஆபாச படங்கள் உங்களால்,பதிவு ஏற்றம் செய்ய பட்டுள்ளது.இனியும் தொடர்ந்தால் சட்ட படி கடுமையான நடவடிக்கை எடுக்க படும் என்று எச்சரிக்கை அனுப்பி இருந்தார்கள்.

மெயிலில் வந்த இணைப்பை அவள் திறந்து பார்க்க முடியவில்லை.அதை திறந்து பார்க்கும் அனுமதி கொடுத்து இருக்கவில்லை.அதனால் அவள் என்ன செய்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.

நல்ல வேளை தலைக்கு வந்த ஆபத்து தலைபாகையுடன் தப்பியது என்று நினைத்து,அவள் தான் செய்து வந்த அந்த வேலையை அனுப்பிய தளத்தை,மேலும் செய்தி அனுப்பாமல் இருக்க அதை தடை செய்தாள்.

தான் செய்த தவறுக்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு கொண்டாள்.அதில் கிடைத்த காசை கொண்டு போய்,வெளியில் போட்டு விட்டு வந்தாள்.

அன்று இரவு நிம்மதியாக தூங்கினாள்.


Rate this content
Log in

Similar tamil story from Crime