இரவு - இரயில் பயணம்
இரவு - இரயில் பயணம்
அமர இடம் இல்லாமல் படியில் பயணித்த தருணம் அது. நிலவின் துணையில் தனிமையை சற்று தள்ளி நிறுத்தி ஏதேதோ சிந்தனையில் உழன்று கொண்டிருந்தேன், அப்பொழுது ஒரு குரல் எங்கே செல்கிறார் சற்று தயக்கத்துடன் பதிலளித்தேன் சென்னை....அவர் உடனே சொன்னார் ஒரு இருக்கையை கை காட்டி அது என்னுடைய பதிவு இருக்கை அமர்ந்து கொள்ள உடனடியாக மறுத்து சொன்னேன் வேண்டாம் பிறகு அவர் கட்டாயப்படுத்தியதனால் சென்று அமர்ந்தேன் அதன் பிறகு அவர் அந்த இருக்கைக்கு வருகை தரவே இல்லை நானும் காத்துக் கொண்டிருந்தேன் வருவார் என்று, அதற்கிடையில் சென்று தேடியும் பார்த்தேன் அவரை அந்த பெட்டியில் நான் எங்கேயும் காணவில்லை. இறுதியாக சென்னையின் நிறுத்தம் வரவும் இறங்கினேன் இறங்கிய பிறகு சற்று நேரம் நின்று திரும்பி பார்த்தேன் சிறிது நேரம் கழித்து அவர் அவருடைய இருக்கைக்கு வந்து அவருடைய பையனை எடுத்துக் கண்டு இறங்கினார். நான் அவரிடம் கேட்டேன் ஏன் இங்கு அதன்பிறகு வந்து அமரவே இல்லை என்று அவர் எதுவும் பதிலளிக்காமல் ஒரு சிறப்பினை மட்டும் பதிலாக கொடுத்தார் அந்த இரவினை நான் இன்று வரை மறக்கவில்லை ஏனென்றால் அன்று எனக்கு சிறிது உடல் நலமும் சரியில்லாமல் இருந்தது. உணவு உண்ணாமல் பசியிலும் இருந்தேன் மிகவும் களைப்பாற்றும் அந்த இருக்கை மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. அவர் முகம் பெயர் எதுவும் எனக்கு நினைவில் இல்லை ஆனால் அந்த உதவிய இன்று வரை நான் மறக்கவில்லை. இன்று வரை பேருந்திலும் சரி ரயில் பயணத்திலும் சரி, யாரேனும் இருக்கைக்காக காத்திருக்கிறார்களா மிகவும் களைப்பாக இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருப்பேன் அவர்களுக்கு இருக்கையும் வழங்கிக் கொண்டிருக்கிறேன். யாரோ ஒருவரிடம் இருந்து ஏதோ ஒரு நல்ல பழக்கத்தை தினமும் நான் கற்றுக் கள்ள நேர்ந்தே தீர்கிறது எல்லோரும் கெட்டவர்களும் அல்ல எல்லோரும் நல்லவர்களும் அல்ல.வீட்டிற்கு வந்ததும் இந்நிகழ்வையின் அம்மாவிடம் கூறினேன் அவர் சொன்னார் உன் தந்தை தான் தந்தை செய்த நன்மைதான் உனக்கு எங்கு சென்றாலும் உதவி கொண்டிருக்கிறது என்று.
