அன்பால்_இணைவோம்
அன்பால்_இணைவோம்
*ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.*
*ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.*
*அப்போது**செருப்பு பிஞ்சுபோச்சு..**அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.*
*அந்த வீட்டுக்காரரை அழைத்து...*
*ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு.*
*புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...*
*காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.*
*அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.*
*அதற்கு அந்த வீட்டுக்காரர்* *அந்த செல்வந்தரைப் பார்த்து...*
*ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.*
*நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.*
*அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்*
*சில ஆண்டுகள் கடந்தன...*
*ஒருநாள் அந்த* *செல்வந்தரே இறந்து போனார்.*
*அவரின் இறுதி ஊர்வலம் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.*
*அப்போது நல்ல மழை.⛈*
*பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...*
*ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.*
*அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.**பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.*
*அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..*
*ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..*
* #அவ்வளவுதாங்க #வாழ்க்கை *
*ஒரு செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது*
*வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...*
*உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனிதனுக்கு மரியாதை*
*#அன்பால்_இணைவோம்*