திருக்குறள்
திருக்குறள்


குறள் 652:என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினைமு.வ உரை:புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.சாலமன் பாப்பையா உரை:இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.கலைஞர் உரை:புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்