காதல்
காதல்
கண்கள் மூடி,
வழி தேடி,
திசை மாறி,
தடுமாறி ஓரிடத்தில்,
நின்ற வேளையில்,
கண்கள் திறந்து,
பார்த்தது என்னவோ,
உன்னை தான்,
இப்போது உன் வழியில்,
என் கால்கள்,
பயணிக்கின்றது,
சூரியனை கண்டவுடன்,
மலரும் சூரியகாந்தி,
சூரியன் செல்லும்,
திசையில் தன்னையும்,
அறியாமல் திரும்பி இருக்கும்,
அது போல,
உன்னை கண்டதும்,
கால்கள் பயணிக்க ஆரம்பித்து விட்டது உன் பாதையில்......