இனிய தனிமையே!
இனிய தனிமையே!
கண்கள் ஏங்கியது!
கண்ணீர் வழிய துடித்தது!
கால்கள் நடக்க மறுத்தது!
கன்னம் சிவக்க தவித்தது!
ஏன் என்னை வாட்டினாய்?
என் இதயத்தை இருக்கி உருக்கினாய்?
கைகளை ஏன் கட்டிப் போட்டாய்?
என் அமைதியை எனக்கு
தேடித்தர நீ ஏன் என்னை
விட்டுப் பிரிந்து போனாய்?
நீயின்றி மனம் தவித்தது
உன் வார்த்தையைக் கேட்க
செவிகள் துடித்தது
ஏன் என்னைப் பிரிந்தாய்
உன் உயிராக இருந்த என்னை
துறக்க துணிந்தாய்
இதற்கு காரணம் யார்?
நானா?
உருவமில்லா என் உயிராகிய
நீயா?
என் மாற்றமா?
என் மனநிலையா?
யார்?
உயிரற்ற சடலமாய்!
உணர்வற்ற உருவமாய்!
மிரள வைக்கும் இருளோடு!
இருள வைக்கும் துன்பத்தோடு!
நிழல் இல்லாதது போல் நிந்தனையில்!
மழையில்லா பயிர்களைப் போல்
வாடி!
சுடும் பாலைவனம் போல்
மனம் காய்ந்து!
பசியின்றி தவிக்கும் குழந்தைப் போல்
மனம் ஏங்கி!
மரமில்லா வனத்தைப் போல்
முகம் வாடி!
நீரில்லா உயிர்களைப் போல்
நான் உன்னைத் தேடி!
என் அருகில் இருந்தும்
நீ என்னை வாட்டி!
உன் அமைதியால் நீ
என்னை கண்ணீரில் மூழ்கி!
இது காலத்தின் மாற்றமா?
நீ என் கற்பனையின் தோற்றமா?
ஏன் என்று தெரியவில்லை?
நீ என்னுள் எப்படி வந்தாய்
என்று புரியவில்லை?
மனம் உருகியது
உயிர் தவித்தது
புன்னகை வீச மறுத்தது
புது விடியல் பிறக்க துடித்தது
என் உடல் உயிருள்ள உருவமாக மாற ஏங்கியது
நீ என்னுடன் பேசும் வரை!
என் மனம் அதை உணரும் வரை!
உன்னுடன் இருக்கும் என் நாட்கள் சொர்க்கமா?
உன் அமைதி அமிர்தமா?
தவமாய் கிடைத்த வரமே!
நீயின்றி நானில்லை இனிமையே!
உருவமில்லா உயிராகிய என்
இனிய தனிமையே!