Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Jaga Maha

Tragedy

3  

Jaga Maha

Tragedy

ரத்தக்கண்ணீர்

ரத்தக்கண்ணீர்

2 mins
170


அது ஒரு தினக் கூலியின் வீடு அந்த வீட்டில் மொத்தம் நான்கு உறுப்பினர்கள்.

தந்தை ஒரு குடிகார ஊதாரி, அவருக்கு

ஒரு மகன் ஒரு மகள்.

தினமும் கூலி வேலை செய்து அதில் வரும்

வருமானத்தில் பாதியை குடித்து அழித்து

மீதியை மனைவியிடம் தருவார்.


அவர் தரும் பணம் கால் வயிற்றிற்கும்

பத்தாது எனவே தாயும் பக்கத்தில் இருந்த

அரிசி ஆலையில் வேலைக்குச் செல்வார்.

பிள்ளைகள் பள்ளியில் படிக்க மதியம்

பசிக்கு சத்துணவு பசி ஆற்றியது.

இப்படியே நாட்கள் கழிய ஒருநாள் அந்த

தாய் விறகு வெட்ட அந்த ஊரின் ஏரிக் கரைக்குச்செல்ல.

விறகு வெட்டும் போது நாகம் ஒன்று அவரை தீண்ட அக்கம் பக்கம் யாரும் உதவிக்கு இல்லாததால் சற்று நேரத்தில்

அவர் உயிர் பிரிந்தது.


தாய் இருக்கும் வரை பிள்ளைகளை கண்ணில் வைத்து பாதுகாத்து வர

இப்போது குடிகார ஊதாரி தந்தையின்

பாதுகாப்பில் இரு பிள்ளைகளும்.

பிள்ளைகள் படித்தது பத்தாம் வகுப்பு

வரை உள்ள பள்ளி ஆதலால் மகள்

பத்தாம் வகுப்பு வரை பயில மேலே

படிக்க பக்கத்து நகரில் உள்ள பள்ளியில்

சேர்ந்து படித்து வந்தாள்.


பேருந்தில் பயணித்து பள்ளி சென்று வர

அவளின் நட்பு வட்டம் விரிந்தது.

அதில் ஒரு முப்பது வயதுடைய வாலிபனும்

அடக்கம்.

முதலில் சிநேகம் என்றவன் பிறகு காதல்

என்றான்.

பெற்றவளின் அன்பு பாதியில் பரிபோக

பெற்றவன் குடியுடன் குடி கொள்ள

பாசத்திற்கு ஏங்கியவள் விழுந்தாள்.


அவன் காதலில்...

முதலில் பயண சந்திப்பு, பள்ளி வாயில்

வரை நீள அவளின் ஆசிரியை அவளை

கண்டிக்க, பள்ளி செல்வதாக கிளம்பி

வந்து அவனுடன் ஊர் சுற்ற துவங்கினாள்.

இவள் ஒரு புறம் இப்படியிருக்க, இவளின்

தம்பி பத்தாம் வகுப்பை பாதியில் கை விட்டு

தகாத சேர்க்கையால் இளவயதிலேயே

புகைப்பது போதை வஸ்து என பாதை

மாறினான்.


மாதங்கள் உருண்டோடி மகளின் வயிறு

புடைக்க ஆரம்பிக்க அவளின் அத்தை

முறை உள்ளவர் அவளை பிடித்து விசாரிக்க

தான் செய்த திருட்டு தனமும் அவன் தன்னை அனுபவித்து பின் கை விட்டதும்

சொல்ல தலையில் அடித்துக்கொண்டு

தவறு செய்யும் முன் உன் தாயின் முகம்

நினைவில் வரவில்லையா எனக்கேட்க.


அவள் காலில் முகம் புதைத்து அழுதாள்.

பிறகு மருத்துவமனை அழைத்துச் சென்ற

அவளின் அத்தை மருத்துவரிடம் விஷயம்

கூற அவளை பரிசோதித்து குழந்தை

நன்கு வளர்ந்திருக்க எதுவும் செய்ய

முடியாது என கை விரித்து.


இது சட்டபடி குற்றமும் கூட சிறுமியை ஏமாற்றி புணர்ந்திருக்கிறான். இதுவும்

ஒரு வகையில் வன்புணர்வு தான்

ஆதலால் இதை நான் போலீசில் தெரிவிக்கிறேன் என போலிசில் புகார்

அளித்திட அவனை பிடித்து சிறையில்

அடைத்தனர்.


அவளை பெண்கள் காப்பகத்தில் சேர்த்து

அவளின் படிப்பிற்கு வழி செய்து அவளின்

பிரசவத்திற்கு பின் பிறந்த பிள்ளை யை

குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பது

என முடிவெடுத்தனர்.

தாய் இருக்கும் வரை குடும்பமாய்

இருந்தது அவள் இறந்ததும் சின்னாபின்னமானது. இதை அரூபமாக

பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்தது அந்த தாயின் உள்ளம்....



Rate this content
Log in

Similar tamil story from Tragedy