மணக்கோலத்தில் என்னவள்.
மணக்கோலத்தில் என்னவள்.
என்னை சிதைக்கும் சிகை அலங்காரம் சொக்க வைக்கும் மைவிழி
காற்றோடு கானம் பாடும் லோலாக்கு
சிவந்த கன்னங்களுக்கு இடையில் சற்று கூடுதலாக சிவந்த உன் இதழ்கள்
கழுத்தை வருடும் ரோஜாக்கள்
கண் கூசும் பொன்னழகு
என் உதிரமாய் நீ உடுத்திய உடை
என்றுமில்லாமல் இன்று
உன் கையில் கூடுதல் சலசலப்பில்
காலில் கூடுதல் கலகலப்பு
பாவை இன்று தேவதையாய்
நானும் சிந்தும் புன்முறுவலுடன் ஓரக்கண்ணால் மொழிகிறாள்.
அவள் நெஞ்சில் ஊஞ்சல் ஆட
தயார் ஆனேன்
காலம் முழுவதும் அவளை காக்க
அக்னியை சாட்சி கொண்டேன்.