காத்திருப்புகள் ஓய்வதில்லை
காத்திருப்புகள் ஓய்வதில்லை
கதிரவனின் வருகையை
எதிர்பார்க்கும் சூரியகாந்தி நான்
அமாவாசை இரவில்
நிலவினை எண்ணி
ஏங்கும் நட்சத்திரம் நான்
பூக்கள் மலர்வதற்காக
காத்திருக்கும் தேன் வண்டு நான்
வான்மழை என்னை ஸ்பரிசிக்க
தவமிருக்கும் முட்செடி நான்
கடவுளின் மாலையில் இடம்பெற
விரும்பும் மலர் நான்
வெற்றியாளனை பெருமைப்படுத்த
எண்ணும் வேர்வைத்துளி நான்
ஓய்வில்லா காத்திருப்புகளுடன்
உன்னுடைய வரவை
எதிர்நோக்கி பார்த்திருக்கும்
பேதை நான்...