மணவினை
மணவினை
மணவினை
நம் மனங்களின் வினை
இருவரி கேள்வி
ஈரவிழிகளில் விடை
என் மனம்
நீ அறிவாய்
உன் மனம்
நான் அறியேன்
மனவினை
நம் சமமற்ற பரிமாற்றம்
அதில் நீ கண்ட ஏமாற்றம்
காலம் போக என்னை மாற்றும்
குற்ற அறிக்கை
எனினும் அது நீ அளித்தது
என்னை தாக்கியது
என்னை மாற்றியது
உன்னை அறிந்ததாய்
என்னால் பெருமிதம் கொள்ள
முடியவில்லை முழுதாய்
இது காதலல்ல
என்று புரியும்
இந்த புரிதல்
புரிந்தால் போதுமே
மெய்மறவேனே
எலியும் பூனையும்
அடித்து கொண்டதை
ஒருநாளும் கண்டதில்லை
உன்னுடன் சண்டையிடும்வரை
பலமுறை வியந்ததுண்டு
இரு இமைகளை கண்டு
சிறுபிள்ளைகள் போல்
நாம் கூடிக்கொள்ளும் வரை
என் உலகம்
நீயென உணர
பல கோடி ஊடல்
போதவில்லையே
உன் உலகில்
நான் யார்?
மொய்க்கும் வண்டோ?
இயக்கும் பொருளோ?
திகட்டாத இனிப்பு
இருட்டிடாத இரவு
கசந்திடாத உறவு
நீ, நான், நாம்!